குட்டி பையா எழுந்திரி டா..!! தாய் யானையின் வைரல் வீடியோ...!!
Elephant Viral video
தூங்கிய தனது குட்டியை பரபரப்பா எழுப்பும் தாய் யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
செக் குடியரசு நாட்டில் ப்ராக் மிருககாட்சி சாலை உள்ளது. இதில் பலதரப்பட்ட விலங்குகளையும் பாதுகாத்து வருகின்றனர். இதில் யானை ஒன்று தனது குட்டியுடன் உள்ளது.
அந்த குட்டி தூக்கத்தில் இருந்த போது தாய் யானை தனது தும்பிக்கையால் எழுப்பியுள்ளது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குட்டி எழவில்லை இதனால் அந்த தாய் யானை பரிதவித்து நின்றது.
இதனை கண்ட மிருககாட்சிசாலை ஊழியர்கள் அந்த குட்டியை எழுப்பினர். தூக்கத்தில் இருந்து விழித்த குட்டி தனது தாயை நோக்கி ஓடியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.