பிரதமர் வீட்டின் மேல் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


பிரதமர் வீட்டின் மேல் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு.!

நாட்டின் தலைநகரான டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் வீடு அமைந்துள்ள பகுதியில் விமானங்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் உள்ளிட்டவைப் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அப்பகுதியில் நேற்று அதிகாலை சந்தேகப்படும் வகையில் ட்ரோன் ஒன்று பறந்துள்ளது. அந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு படையினர், டெல்லி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அந்த தகவலின் படி போலீசார்விரைந்துச் சென்று அந்த ட்ரோனைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், இதுவரைக்கும் அந்த ட்ரோன் கண்டுபிடிக்கப்பட வில்லை.இதனால் சந்தேகமடைந்த போலீசார் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விசாரித்தனர். 

அப்போது அதுபோன்ற எந்த ஒரு ட்ரோனும் தென்பட்டதாக தெரியவில்லை என்று விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drone fly on prime minister house in delhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->