அனைத்து தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கும் இனி இது கட்டாயம்., அதிரடியாக உத்தரவு பிறப்பித்த இந்திய தொழில்நுட்ப கவுன்சில்.!
College Students FaceMask Again may 2022
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உருமாற்றம் அடைந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகளவில் இதுவரை மொத்தமாக 52.69 கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உருமாறிய கொரோனா (ஓமைக்ரான் வகை) வைரஸ் மீண்டும் தலையெடுக்க தொடங்கியுள்ளது. இதன்காரணமாக, மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று, அனைத்து தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், கல்லூரிக்கு வரும் மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் திரளாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
College Students FaceMask Again may 2022