சீனாவில் தீவிரமடையும் புதியவகை கொரோனா.. மீண்டும் முழுஊரடங்கு.!
China lockdown for new corona
உலகளவில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா அதிகரித்துள்ளது.
சீனாவின் வடகிழக்கு நகரமான சிங்சுனில் புதியவகை கொரோனா பரவி வருகிறது. 90 லட்சம் பேருக்கும் மேல் மக்கள் வசிக்கும் சாங்சுன், ஜில்லின் மாகாணங்களில் கொரோனா அதிகரிப்பால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சாங்சுன் மாகாணத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகரிக்க சீன அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சீனாவின் வடகிழக்கு நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 255 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சாங்சுன் உள்ளிட்ட வடகிழக்கு சீன நகரங்களில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
China lockdown for new corona