ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டு தலம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டு தலம் அருகே நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் உள்ள மத வழிபாட்டு தலம் அருகே நேற்று பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bombing in Afghanistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->