மெட்ரோ ஸ்டேஷனில் திக் திக் சம்பவம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.! இளம்பெண் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


பெல்ஜியம் நாட்டில் ஒரு இளம்பெண் ரயில் வருகைகாக மெட்ரோ ஸ்டேஷன் நடைபாதையில் காத்திருந்தார். அப்பொழுது ரயில் வருகின்ற நேரம் பார்த்து அந்தப் பெண்ணை அருகில் நின்றவர் தண்டவாளத்தில் வேகமாக தள்ளி விட்டுள்ளார்.

மெட்ரோ ரயிலில் அவசரகால பிரேக் சரியான நேரத்தில் கை கொடுத்ததால் அந்த பெண் மீது ரயில் மோதவில்லை. ஆனால், தண்டவாளத்தில் வேகமாக விழுந்த காரணத்தால் அந்த பெண்ணிற்கு கடுமையாக அடி விழுந்து இருக்கும்.

தண்டவாளத்தில் தள்ளி விட்ட நபர் ஏன் தள்ளி விட்டார் என்பது குறித்த காரணங்கள் தெரியவில்லை. அந்தப் பெண் தற்போது உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது.

அத்துடன் தள்ளிவிட்டவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Belgium women attempt murder


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->