அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் குலுங்கிய வீடுகள்: அலறியடித்து ஓடிய ஆப்கான் மக்கள்! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 2:54 மணியளவில் பூமிக்கு அடியில் 29 கிலோமீட்டர் ஆழத்தில் 5.1 ரிக்டர் அலகுகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக இன்று நள்ளிரவு 12:28 மணி அளவில் ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் மாகாணத்தில் 126 கிலோமீட்டர் தொலைவில் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் 140 கிலோ மீட்டர் ஆழத்தில் 12:55 மணியளவில் அதே பகுதியில் 4.8 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் கட்டிடங்களும் வீடுகளும் குலுங்கியது. 

இதனால் அச்சமடைந்த மக்கள் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan today earthquake 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->