21 வயதில் பாட்டியாகிப்போன இளம்பெண்மணி.. காதல் அற்புதமானது..!! - Seithipunal
Seithipunal


பிரிட்டிஷ் நாட்டில் உள்ள கிரெக்வஸ்ண்ட் கெனாட் பகுதியை சார்ந்தவர் மார்க் (வயது 56). இவரது மனைவியின் பெயர் பெக்கா கீலி (வயது 21). பெக்காவிற்கு 16 வயதாகும் நேரத்தில் இசை நிகழ்ச்சியில் வைத்து பாடகரான மார்க்கை சந்தித்துள்ளார். 

மார்க்கின் முதல் திருமணத்தில், இவருக்கு மகள் இருக்கும் நிலையில், இவர் பெக்காவை விட ஆறு வயது அதிகமானவரும் ஆவார். மார்க்கின் இளையமகளின் வயதை கொண்ட பெக்கா நட்பு ரீதியாக மார்க்கிடம் பேசி வந்துள்ளார். 

இந்த பழக்கமானது பின்னாளில் காதலாக மலர்ந்து திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். மேலும், பெக்காவிற்கு வயது குறைவு என்பதால், உன் வயதில் உள்ள துணையை தேடிக்கொள் என்று மார்க்கும் கூறியுள்ளார். 

இருப்பினும் தனது காதலை விட முடியாத பெக்கா பல வறுபுறுத்தல் செய்த பின்னரே, இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில், பெக்காவிற்கு சென்ற அக்டோபர் மாதத்தின் போது முதல் குழந்தை பிறந்துள்ள நிலையில், 56 வயதான மார்க்கை திருமணம் செய்துள்ளதால் இவரை பாட்டி என்று பெரும்பாலானோர் அழைத்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக பெக்கா தெரிவித்த சமயத்தில், எங்களின் உறவு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்று பலரும் எண்ணினர்.. மார்க்கும் என்னிடம் பலமுறை வயதிற்கு ஏற்ப துணையை தேடிக்கொள்ள வற்புறுத்தினர். இருப்பினும் நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a British girl called old lady due to marry aged man


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->