9 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு.. வெளியான அதிரடி அறிவிப்பு.!!
9 days full lockdown in china
கொரோனாவின் பிறந்த இடமாக கருதப்படும் சீனாவில் கடந்த சில வாரங்களாக காரோண தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சீன அரசு ஜீரோ கோவிட் பாலிசி என்ற கொள்கையை கடைப்பிடித்து வருவதால், ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கூட தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
சாங்சுன், ஜலின் உள்ளிட்ட நகரங்களில் அதிகரித்து வந்ததை அடுத்து அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் மற்றொரு பெரிய நகரமான ஷாங்காயில் ஒருநாள் பாதிப்பு மேலும் அதிகரித்ததை அடுத்து இன்று முதல் அடுத்த ஒன்பது நாட்களுக்கு முழு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அத்தியவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் ஷாங்காய் நகரில் 3,470 பேருக்கு கூற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
English Summary
9 days full lockdown in china