ஈரான் சிறையில் கைதிகளுக்குள் நடந்த மோதலில் சிறைக்குள் தீ வைப்பு.! 4 பேர் பலி என தகவல் - Seithipunal
Seithipunal


ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள பிரபலமான எவின் சிறையில் அரசியல் கைதிகள், வெளிநாட்டு கைதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு சிறைச்சாலையில் கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வளாகத்தில் உள்ள பொருள்களுக்கு தீவைக்கப்பட்டதாகவும், துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகிய உள்ளன.

இதில் சிறைச்சாலைக்குள் தீ பற்றியது மற்றும் புகை வெளியேறிய காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

மேலும் இந்த மோதலில் 4 கைதிகள் உயிரிழந்ததாகவும், 61 கைதிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், தற்போதைக்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைக்குள் மோதல் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் தொலைத்தொடர்பு மற்றும் இணைய வசதிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 died in conflict among prisoners in Iran


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->