பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு - 17 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 17 பேரை கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் மேற்கு நகரமான பெஷாவர் காவல் தலைமையகத்திற்குள் உள்ள மசூதியில் வழக்கம் போல் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது மதியம் 1.40 மணியளவில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை தன்னைத்தானே வெடிக்கச் செய்தார்.

இந்த பயங்கர குண்டு வெடிப்பில் மசூதியின் மேற்கூரை மற்றும் சுவர் கட்டமைப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பில் 97 போலீசார் உள்பட 101 போ் உயிரிழந்துள்ளனர். மேலும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த கொடூர குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று, பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தளபதி உமா் காலித் குராசானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பினர், குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்திற்குரிய 17 நபர்களை கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட 17 நபர்களும் குண்டுவெடிப்பு சம்பவம் இடத்தையோட்டி வசித்தவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் தீவிர விசாரணை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 arrested in connection with Pakistan mosque blast


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->