ஒரே வாரத்தில் 1200 முறை - ஜப்பானை கதிகலங்க வைத்த நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


தீவுநாடான ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. மூன்று மணி நேரத்தில் முப்பது முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தில் இதுவரைக்கும் 161 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புபடையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பின்னர் வலுவான பல நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

அதன் படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 1,214 நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. இதனால் மேலும் பல நிலநடுக்கம் ஏற்படலாம் என்று மக்கள் பீதியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

1200 times earthquake in jappan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->