பர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் தாக்குதல்.! 12 பேர் பலி - Seithipunal
Seithipunal


பர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவில் கடந்த சில ஆண்டுகளாக போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வடக்கு பர்கினோ பாசோவில் உள்ள போலா பகுதியில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் கண் இமைக்கும் நேரத்தில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் இருந்து அப்பாவி மக்கள் நாளாப்புறமும் அலறியடித்து ஓடினர்.

இந்த பயங்கர தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த விசாரணையில், ராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பொதுமக்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பபகுதி முழுவதும் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 killed in terrorist attacks in Burkina Faso


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->