4 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்யும்.! வானிலை மையம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழை கடந்த தமிழகத்தில் 16 ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த புதன்கிழையில் இருந்து மழை பெய்து வருகிறது. கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. 

இதுதொடர்ப்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, அரபிக்கடலில்நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலைபகுதியின் காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு தினங்களுக்கு இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

மேலும்,கோவை,  நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பும் உள்ளதாக .புவியரசன் தெரிவித்தார்.

அந்தமான் கடல் பகுதியில் இருந்து தமிழகத்தை நோக்கி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், வருகிற 21, 22 ஆம் தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு, ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

weather report on october 19


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->