தமிழகத்தை புரட்டி எடுக்க போகும் மழை.. "ஆரஞ்சு அலர்ட்" வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!
sep 21 weather report in tamilnadu
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என தெரிவித்துள்ளது.
இதனால் கர்நாடகா மற்றும் கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்பதால் இரண்டு மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஆந்திரா, தெலுங்கானா, கோவை, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் ஒரு சில பகுதிகளில் அதிக மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
sep 21 weather report in tamilnadu