தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. வெயில் தாக்கத்தால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

வெயில் தவிக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சூறை காற்றுடன் மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது. நேற்று திடீரென திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.

இந்நிலையில் வெப்பச்சலனம காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதே சமயத்தில் பகல் நேரங்களில் அனல் காற்றின் தாக்கமும் அதிகமாக காணப்படும். சென்னையில் 107 டிகிரி வரை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain in tamil nadu andu puducherry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->