வடகிழக்கு பருவமழை முடிந்தது.. தமிழ்நாட்டில் இனி குளிரும்.. வெயிலும் தான்..!!
Northeast monsoon ended from jan15 in tamilnadu
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் விடை பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் ஈரோட்டில் அதிகபட்சமாக 35.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
தமிழகத்தின் ஒருசில இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும், அதே வேளையில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றுடன் வடகிழக்கு பருவமழை முடிந்தாலும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Northeast monsoon ended from jan15 in tamilnadu