#Justin || அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம்
Next 3 hours rain in 9 districts of tamilnadu
கடந்த சில நாட்களாக கொளுத்தும் கோடை வெயில் மத்தியில் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திருச்சி, கரூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விழுப்பும், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Next 3 hours rain in 9 districts of tamilnadu