அரபிக்கடலில் உருவாகப்போகும் புயல்... வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வானிலை ஆய்வு மையம் தகவல்.!
monsoon advances in kerala
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தென்மேற்கு பருவக்காற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபு கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மையம் மையம் கொண்டுள்ளது.
இது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அதை எடுத்து புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கன்னியாகுமரி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
monsoon advances in kerala