13 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
Moderate rain likely in 13 districts of tamilnadu in next a couple of hours
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் எழும்பூர், தேனாம்பேட்டை, வடபழனி, சாலிகிராமம் கோடம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, கொளத்தூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் மிதமான மழை பெய்துள்ளது.
English Summary
Moderate rain likely in 13 districts of tamilnadu in next a couple of hours