தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை.! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் மக்கள்.!!
may 15 weather report
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய பத்து மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அறிவித்துள்ளது
சனிக்கிழமை வரை பல பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேசமயத்தில் சில இடங்களில் வெயிலும் அடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையைப் பொருத்தவரையில், ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.