மீனவர்களே உஷார்!! வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!!
Low pressure area formed in bay of Bengal
லட்சத்தீவுகளை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தற்போது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வரும் அக்டோபர் 23ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மற்றும். இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவம் மழை தென்னிந்திய பகுதிகளில் தொடங்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது தென்னிந்தியாவில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசும் நிலையில் வடகிழக்கு பருவமடையானது ஓரிரு நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் அக்டோபர் 25ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் பொறுத்தவரை தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் சூறைக்காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வரையிலும், தென்மேற்கு அரவிக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு அரபி கடல் பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என்பதால் வரும் அக்டோபர் 23ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Low pressure area formed in bay of Bengal