தமிழகத்தில் மழை வெளுத்து வாங்க போகும் மாவட்டங்கள்.. 50 கி.மீ வேகத்தில் வீசும் காற்று.. வானிலை மையம் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை மாலை நேரத்தில் வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரத்தில் 4 சென்டிமீட்டர் மழையும், கோவையில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஜூன் 17 முதல் 19 வரை மத்திய கிழக்கு அரபிக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jun 17 weather report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->