#Breaking :: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நேற்று வரை நிலை கொண்டிருந்த நிலையில் வடவேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக வரும் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் வட தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கன மற்றும் மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் தற்பொழுது வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக எண்ணூர், நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையின் தென்கிழக்கு 670 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. 

மேலும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதேபோன்று தெற்கு ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி மற்றும் இலங்கையை ஒட்டி உள்ள கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளில் வரும் 22 ஆம் தேதி வரை மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due to the low pressure zone form the storm warning cage is raised in the ports


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->