தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகும் பகுதிகள்? வானிலை ஆய்வு மையம் தகவல்!! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை ஓய்ந்து மிதமான வானிலை நிலை வருகிறது. 

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குமரி கடல் பகுதியில் நிலை வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. 

குறிப்பாக கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் நாகப்பட்டினம் சிவகங்கை புதுச்சேரியில் ஒரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dec 06 weather report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->