தமிழகத்தில் 3 மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்'.. 4 மாவட்டங்களுக்கு கனமழை.! 5 மாவட்டங்களுக்கு மிதமான மழை.!!
aug 07 weather report in tamilnadu
தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரமடைந்துள்ளதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு பருவகாற்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மலைசரிவு பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை பெய்யும்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சேலம், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மலைசரிவு பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை பெய்யும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
aug 07 weather report in tamilnadu