குருபெயர்ச்சி 2019 - 2020.! மேஷ ராசிக்கான பலன்களும்., பரிகாரங்களும்..!!
gurupeyarchi mesha rasi
மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) தேதியின் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிகாலை 03.14 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
இந்த செய்திக்குறித்த முழு தகவலை அறிய வீடியோ பதிவை காணவும்:
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 18ஆம் (04.11.2019) தேதியன்று பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் நவமி திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் விடியற்காலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மேஷ ராசி :
குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திலிருந்து ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சியாகும் குருபகவானால் பெயர், புகழ், செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலமாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டப்போகிறது. பெண்களுக்கு புத்திர பாக்கியம் கைகூடும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சங்கடங்கள் விலகி நன்மைகள் பெருகும். தந்தையின் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். ஆன்மிக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் அமையும். குலதெய்வ கோவில் திருப்பணிகளில் முன்னின்று நடத்தும் பொறுப்புகள் வந்து சேரும். வெளிநாட்டில் வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்புகள் அமையும். ஆன்மிகத்தில் உள்ளவர்கள் பெயரும், புகழும் அடைவார்கள்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
விரும்பிய இடங்களில் பணி இடமாற்றம் கிடைக்கும். இதுவரை மேலதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து தங்களின் திறமை வெளிப்படும். முயற்சிக்கேற்ற பதவி உயர்வை பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு :
தொழிலில் மேன்மை உண்டாகும். பழைய வராக்கடன்கள் வசூலாகி தொழிலில் செல்வநிலை சிறப்படையும். வியாபாரம் சார்ந்த புதிய முயற்சிகள் அனைத்தும் கைகூடும்.
மாணவர்களுக்கு :
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். வேலைக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கைகூடும். கல்லூரி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் கல்வியில் நாட்டத்துடன் காணப்படுவார்கள்.
பெண்களுக்கு :
விரும்பிய இடத்தில் திருமணம் அமையும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கள் திறமைக்கேற்ப பதவி உயர்வு கைகூடும். குடும்பத்தில் பொருளாதார நிலை உயர்வடையும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் விஷயங்கள் நடைபெறும்.
விவசாயிகளுக்கு :
மஞ்சள் மற்றும் வருட பயிர்களை பயிரிடுவோருக்கு இந்த வருடத்தில் அமோகமான விளைச்சல் கிடைக்கும். நீர்வளம் சிறப்பாக அமையும். பணியாட்களின் ஆதரவு சிறப்பை கொடுக்கும். சொத்து விரிவாக்க முயற்சி கைகூடும்.