வேடிக்கை பார்த்ததால் வந்த வினை - வாலிபரின் உயிரை பிரித்த கிரேன்.! - Seithipunal
Seithipunal


வேடிக்கை பார்த்ததால் வந்த வினை - வாலிபரின் உயிரை பிரித்த கிரேன்.!

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நள்ளிரவில் கேஸ் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அந்த வழியாகச் சென்ற கிரேன் ன்றை ஒட்டி வந்த நபர் இந்த விபத்து காட்சிகளை பார்த்தபடி சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் கிரேன் எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் மோதி அருகில் வந்த இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், உயிரிழந்த வாலிபர் பனையூரைச் சேர்ந்த ரசீத் அகமது என்பது தெரிய வந்தது. இதற்கிடையே அப்பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதால் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth died accident in chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->