ஏரியில் மூழ்கி இளைஞர் பரிதாப பலி.. கால்பந்தாட்ட போட்டியை பார்க்க வந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்..! - Seithipunal
Seithipunal


கால் பந்து போட்டியை காணவந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை , பம்மதுகுளம் பகுதியில் ஒருநாள் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த  போட்டியை காண புழல் பகுதியைச் சேர்ந்த ஷியாம் (22), விஜயராஜ் (19) என்பவர்கள் தங்கள் நண்பர்களுடன் வந்தனர்.  அவர்கள் அங்கிருந்த ஏரியில் குளிக்க சென்றனர்.

அப்போது, ஷியாம் (22), விஜயராஜ் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் காவல்துறையினருக்கு தீயணைப்புதுறையினருக்கும் தகவல் அளித்தனர். இந்த தகவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தண்ணீரில் மூழ்கிய இருவரையும் சடலமாக மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Death In Chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->