ஆசைவார்த்தை கூறி +2 மாணவி., பாலியல் பலாத்காரம்..!! போக்சோவில் இளைஞர் கைது..!!
Youth arrested for raping student
ஆசை வார்த்தை கூறி +2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் +2 படிக்கும் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கும் வாய்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இது அந்த சிறுமியின் தாய்க்கு தெரியவரவே அவர் சக்திவேல் கண்டித்துள்ளார். தனது மகளை அவர் தனது தாய் வீட்டில் கொண்டு விட்டுள்ளார்.
இதனை அடுத்து, பாட்டி வீட்டில் இருந்த சிறுமியை காணவில்லை என பாட்டி தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தாய் தனது மகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அப்போது அந்த சிறுமி தான் சக்திவேலுடன் சென்னையில் இருப்பதாக தெரிவித்தார். உடனே அவரது தாய் அவரை ஊருக்கு வர சொல்லியுள்ளார்.
அங்கு வந்த அந்த சிறுமி சென்னையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சக்திவேலை கைது செய்த காவல்துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth arrested for raping student