மனைவி கர்ப்பம்.. உயிர் மீனை வைத்து கணவன் செய்த காரியத்தால், துடிதுடித்து பறிபோன உயிர்.!  - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாகவே சமூக வலைதளங்களில் பிற பொழுதுபோக்கு செயலிகளுக்கு சவாலாக இருப்பது டிக் டாக் செயலி தான். டிக் டாக் பயனாளர்கள் அதீத விருப்பங்களை பெறுவதற்காக பல்வேறு துணிகரமான செயல்களை செய்து உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றன. அது போல தான் இளைஞர் ஒருவர் டிக்டாக்கில் பிரபலமாக மிகவும் ஆபத்தான செயலை செய்து பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றார். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி பகுதியில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி 7மாத கர்ப்பமாக இருக்கின்றார். இவர்களுக்கு முன்னதாக இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை இருந்துள்ளது. டிக்டாக் போதையில் மூழ்கிய வெற்றிவேல் ஒருநாள் மதுபோதையில் தான் உயிருள்ள மீனை அப்படியே விழுங்குவதாகவும் அப்பொழுது அதனை வீடியோ எடுக்குமாறும் தன்னுடைய நண்பரிடம் தெரிவித்துள்ளார். 

அதன்படி நண்பர்கள் வீடியோ எடுக்கும் பொழுது, உயிருள்ள மீனை வெற்றிவேல் முழுங்கியுள்ளார். அப்பொழுது அந்த மீன் அவருடைய சுவாச குழாயில் சிக்கி, மூச்சு திணறி மயங்கி விழுந்துள்ளார். இதனைத்தொடர்ந்து உடனிருந்த நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். டிக் டாக் மோகத்தால் இப்படி ஆபத்தான காரியங்களை செய்து பலரும் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். மனைவி கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young men death in krishnakiri while making video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->