திருப்பூர் || இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை.! போலீசார் விசாரணை.!
Young man suicide in Tiruppur
திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் செல்வகுமார்(25). இவர் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை செல்வகுமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து வெளியே சென்ற பெற்றோர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, செல்வகுமார் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தந்தை சிவகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்வகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Young man suicide in Tiruppur