பேய் பிடித்ததாக கூறி பூசாரியிடம் மந்திரித்த வாலிபர்.! தூக்கு போட்டு தற்கொலை.!
Young man suicide in Ariyalur
அரியலூர் மாவட்டத்தில் பேய் பிடித்ததாக கூறி பூசாரியிடம் மந்திரித்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கீழையூர் பகுதியில் சேர்ந்த ஜோசப் என்பவரது மகன் வேளாங்கண்ணி ( 25). இவருடைய மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வேளாங்கண்ணிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அப்பகுதியில் இருந்தவர்கள் வேளாங்கண்ணிக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அவரை பூசாரியிடம் அழைத்துச் சென்று மந்திரிக்க செய்துள்ளனர். ஆனால் வேளாங்கண்ணி வாயிலில் உள்ள வேப்பமரத்தில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கீழப்பழுவூர் போலீசார் உயிரிழந்த வேளாங்கண்ணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Young man suicide in Ariyalur