புதுக்கோட்டை : ஆடல் பாடல் நிகழ்ச்சியில் நண்பரைத் தாக்கியதற்காக கேள்வி கேட்ட வாலிபருக்கு நடந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை : ஆடல் பாடல் நிகழ்ச்சியில் நண்பரைத் தாக்கியதற்காக கேள்வி கேட்ட வாலிபருக்கு நடந்த கொடூரம்.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் அருகே ஒடுகம்பட்டியில் பிடாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு நேற்று ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஒடுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த முகமது யாசின் என்ற இளைஞர் காயமடைந்தார். 

இதைப்பார்த்த பொதுமக்கள் காயமடைந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது விக்னேஸ்வரன் என்ற இளைஞர், முகமது யாசினை கல்லால் தாக்கியவர்களை சும்மா விடமாட்டேன் என்று கூறிவிட்டு மருத்துவமனை நோக்கிச் சென்றுள்ளார். 

அவரை வழிமறித்த பள்ளத்துப்பட்டியைச் சேர்ந்த சில நபர்கள் கம்பியால் சரமாரியாக குத்தியுள்ளனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விக்னேஸ்வரனின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சம்பவம் தொடர்பாக பள்ளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man kill for ask question to assaulting a friend


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->