தா.பழூர் : மதுபானக் கடை அருகே மயங்கி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல கஞ்சம் கொள்ளை பகுதியை சேர்ந்தவர் அருள்பாண்டியன். பெயிண்டரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், இவர் சம்பவத்தன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் அருகே வேலைக்குச் சென்றுள்ளார்.

அங்கு வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி வரும்போது கோடாலியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் மதுவங்கி அருந்தியுள்ளார். மது தலைகேறியதால்  அருகே மயங்கி கிடந்துள்ளார்.

இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் அருள்பாண்டியனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அருள்பாண்டியனின் நிலைமை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து, மருத்துவர்கள் அருள்பண்டியனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று அருள்பாண்டியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, தா.பழூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man death in near kodali tasmac


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->