மனைவி அவரது தங்கை என பலரை காதலித்து டிமிக்கி கொடுத்த காதல் மன்னன்!! இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!!
young man cheated lot of girls
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் இளவரசி. இவருக்கும் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் உறவினர் முறையான கார்த்திக் என்பவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர்.
இவர்களது நெருக்கமான பழக்கத்தால் இளவரசி கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயம் கார்த்திக்கு இளவரசி தெரியப்படுத்தியுள்ளார். ஆனால் இளவரசியை ஏமாற்ற முடிவு செய்துள்ளார் கார்த்திக். இந்த விஷயம் இளவரசியின் பெற்றோருக்கு தெரிந்ததால் திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் இருதரப்பும் சமரசமாகி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், வேலை தேடுவதாக வெளியூர் சென்ற கார்த்திக் அதன்பிறகு இளவரசியை தொடர்பு கொள்ளவில்லை. சில நாட்களுக்கு பிறகு, இளவரசியின் பெரியப்பா மகள் மைதிலி என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதாக இளவரசிக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளவரசி மற்றும் அவரது பெற்றோர் மீண்டும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கார்த்திக் ஏற்கனவே திருப்பூரில் பணியாற்றியபோது அப்பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணை காதலித்து ஏமாற்றியதும் அண்மையில் தெரியவந்து இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களை காதலித்து ஏமாற்றுவதை பழக்கமாக வைத்திருந்த கார்த்திக்கை போலீசார் தேடிவருகின்றனர்.
English Summary
young man cheated lot of girls