ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியுடன் பலமுறை உல்லாசம்.. இளைஞர் தலைமறைவு.! - Seithipunal
Seithipunal


ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள இலுங்கிப்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்த சிறுமி வெளியூரில் இருந்து கோயில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது இளைஞர் அந்த சிறுமியை என்னுடன் திருவிழாவுக்கு வர மாட்டாயா என கூறி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி யாரும் இல்லாத காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதேபோல் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் சிறுமி போன் செய்தாலும் எடுக்காமல் தவித்து வந்துள்ளார். இதனையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிறுமி தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ராமமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ராமமூர்த்தியை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man cheat and enjoy 17 years old girl in virudhunagar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->