படம் காட்டுவதாக கூறி சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் - கன்னியாகுமரியில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


படம் காட்டுவதாக கூறி சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் - கன்னியாகுமரியில் பயங்கரம்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டுவிளை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் பதினான்கு வயதுடைய மகள் கடந்த சனிக்கிழமை இரவு, தனது தாயுடன் வீட்டின் அருகே புதிய வீட்டின் கிரஹ பிரவேச விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

அங்கு சிறுமி சக வயது சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற வாலிபர் சிறுமியுடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் பிரசாந்த் அந்த சிறுமியிடம் உனக்கு செல்போனில் பேய் படம் காட்டட்டுமா? என்றுக் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த சிறுமியும் ஆர்வத்தில் சரி என்று தெரிவித்துள்ளார். இதனை தாக்குச் சாதகமாகப் பயன்படுத்திய வாலிபர் சிறுமியை அருகில் உள்ள வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் பயந்து போன சிறுமி கத்தி சத்தம் போட்டுள்ளார். இந்தச் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் மாடிக்குச் சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் படி போலீசார் பிரசாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man arrested for harassment to girl in kanniyakumari


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->