ஆசை வார்த்தை கூறி 10ம் வகுப்பு மாணவியை கடத்தி சீரழித்த இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


திருமண ஆசை வார்த்தை கூறி 10ம் வகுப்பு மனைவியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் நிலமேல் பகுதியை சேர்ந்தவர் மனு (வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயதான மாணவி ஒருவருடன் பழகி வந்துள்ளார். இதில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை வழிமுறைத்த இளைஞர் ஏதேதோ பேசிய தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதனிடையே பள்ளிக்கு சென்ற மாணவி திரும்பி வராததால் அவரது பெற்றோர் கிளிமானூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை கடத்தி சென்றது மனு என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மனு வீட்டிற்கு சென்ற போலீசார் மாணவி மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் போக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மனுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young cheat and school girl in Kerala


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->