நள்ளிரவில் பயங்கரம்.! ஆட்டோவில் சென்ற பெண் கொடூரமாக வெட்டிக்கொலை.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் நள்ளிரவில் ஆட்டோவில் சென்ற பெண்ணை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கட்டாரங்குளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி வெள்ளைதுரைச்சி(30) நேற்று உறவினர் வீட்டு சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். பின்பு நிகழ்ச்சி முடிந்ததும் இரவு வானரமுட்டி பகுதியை சேர்ந்த சண்முகராஜ் என்பவரது ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது காளம்பட்டி காட்டுப்பகுதி அருகே ஆட்டோ வந்தபோது திடீரென ஆட்டோவை வழிமறித்த மர்ம நபர்கள் ஆட்டோவில் இருந்த வெள்ளைதுரைச்சியை அறிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இதைப்பார்த்து ஆட்டோ ஓட்டுநர் சண்முகராஜ், அவர்களை தடுக்க முயன்றபோது அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் சண்முகராஜ் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள் வெள்ளைதுரைச்சியை சரமாரியாக அறிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே வெள்ளைதுறைச்சி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மயக்கம் தெளிந்த ஆட்டோ ஓட்டுநர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த சண்முகராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த வெள்ளைதுரைச்சியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வெள்ளைதுரைச்சியை கொன்ற மர்ம நபர்கள் யார்? எதற்காக கொன்றார்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman who was traveling in an auto was hacked to murder in the mid night in Thoothukudi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->