கடலூர் : ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து மனு அளித்தனர். அப்போது, பெண் ஒருவர் திடீரென்று கதறி அழுது கொண்டு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். 

இதைப்பார்த்த பாதுகாப்பு போலீசார் ஓடி வந்து அந்த பெண்ணிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரை ஆசுவாசப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அந்த பெண் கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கத்தைச் சேர்ந்த அம்சவல்லி என்பது தெரியவந்தது. இவர் கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் வளையல்கடை நடத்தி வந்துள்ளார். 

இவரது உறவினர் ஹரி கிருஷ்ணன் என்பவர் அம்சவல்லியை பார்ப்பதற்காக காரில் வந்துள்ளார். அப்போது அந்த இடத்தில இருந்த ஒரு நபர் திடீரென்று ஹரி கிருஷ்ணன் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். 

இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் வளையல் கடை நடத்துவதற்கும் தொந்தரவு அளித்து வருகிறார். அதனால், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உடலில் பெட்ரோலை ஊற்றியது தெரிய வந்தது. 

இதைக்கேட்ட போலீசார் இது சம்பந்தமாக புகார் மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக இதுபோன்ற நடவடிக்கையில் வருங்காலங்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman sucide attempt in cuddalore colector office


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->