விருத்தாச்சலத்தில் பரபரப்பு - பிரசவித்த பெண் உயிரிழந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அடுத்த மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி-கல்பனா தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கல்பனா பிரசவத்திற்காக கடந்த ஐந்தாம் தேதி விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு கல்பனாவிற்கு நேற்று காலை 11 மணிக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து ஆண் குழந்தையை எடுத்தனர். இதைத்தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த கல்பனா நேற்று மாலை திடீரென உயிரிழந்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கல்பனாவிற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும் முறையான சிகிச்சை அளித்து இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்றும் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமல்லாமல் கல்பனாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரது உடலை வாங்குவதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பின்னர், கல்பனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையின் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died after baby born in viruthachalam govt hospital


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->