அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளம்பெண் பலி.. திருச்சி அருகே நிகழ்ந்த சோகம்..!
Woman Death in Accident
இளம் பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அலேக்ஸ் பாண்டியன். இவரது மனைவி யோகநாயகி கடந்த சில தினங்களுக்கு முன்பு டின்பிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக தனது சொந்த ஊருக்கு சென்று உள்ளார்.
21ம் சனிக்கிழமை அங்குள்ள அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிந்து விட்டது சாலையை கடக்கும்போது மின்னல் வேகத்தில் வந்த கார் யோகநாயகி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது