கணவரிடைய ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனைவி தூக்கு போட்டு தற்கொலை - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரில் கணவரிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுதர்சன். இவர் தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சுடர்மனி(29). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சுதர்சனுக்கு மது அருந்து பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து மீண்டும் சுதர்சன் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடையே தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சுடர்மனி வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சுடர்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சுடர்மணியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife suicide in Thanjavur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->