தொந்தரவு செய்த கணவனை, துடிக்க துடிக்க கத்தியால் குத்திய மனைவி.! திருவாரூரில் பகீர்.!
wife kills her husband
திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் அருகே ஆவூர் பகுதியை சேர்ந்த நேசமணி, என்பவருக்கு சாது என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக காதலித்து கரம் பிடித்தார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கும், சாதுவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. 10 நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா தன்னுடைய கணவனிடம் கோபித்துக் கொண்டு அங்கு இருக்கும் தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர சாது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்பொழுது ஐஸ்வர்யாவின் தங்கை கணவரான கவியரசன் என்பவரும் இருந்துள்ளார். இந்த நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஐஸ்வர்யா மற்றும் கவியரசன் ஆகியோர் ஒன்று சேர்ந்து சாதுவின் நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சிதுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சாதுவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே சாது உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஐஸ்வர்யா, கவியரசன் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.