2 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் தற்கொலை.! நாமக்கல் அருகே அதிர்ச்சி.. காரணம்?
Wife commits suicide in namakkal
நாமக்கல் மாவட்டத்தில் கணவன் மீதான சந்தேகத்தில் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலகுமார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் பாலகுமாரனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக தமிழ்ச்செல்விக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று இரவும் இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த தமிழ்ச்செல்வி வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் போலீசார், தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Wife commits suicide in namakkal