பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு திரும்பும் போது பரிதாபம்! மோட்டர் பைக் நேருக்கு நேர் மோதி இருவர் பலி!!
When returning home for Pongal festival, it is a pity! Two people died in a motorcycle collision!!
கடலூர் மாவட்டம் ஓமாம்புலியூர் ரோடு பகுதியில் வசிப்பவர் விஜயலட்சுமி இவர் 16வது வார்டு திமுக பேரூராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது கணவர் தாமோதர கண்ணன்(வயகத்து 55). இவர் சனிக்கிழமை இரவு, தஞ்சை மாவட்டம் வல்லம் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் தனது மகள் மினிஷா(வயது 19) வை பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு பைக்கில் அழைத்துக் கொண்டு காட்டுமன்னார்கோவில் நோக்கி வந்தார்.
அப்போது காட்டுமன்னார்கோவிலில் இருந்து ஷண்டன் கிராமத்தைச் சேர்ந்த கவிதாஸ் மற்றும் அவரது பின்னால் அமர்ந்திருந்த அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் விக்கி ஆகிய இருவரும் ஷண்டன் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வீரானந்தபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று எதிர்பாராத விதமாக இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்திகள் சம்பவ இடத்திலேயே தாமோதர கண்ணன் (வயது 55) மற்றும் மற்றொரு பைக் ஓட்டி வந்த கவிதாஸ்(21) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
மேலும் காயமடைந்த தாமோதரனின் மகள் மற்றும் மற்றொரு மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த விக்கி(19) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
When returning home for Pongal festival, it is a pity! Two people died in a motorcycle collision!!