முகநூல் பழக்கம், திருநங்கையை கரம்பிடித்து இளைஞர்.!
villupuram transgender marraige
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் முகநூல் மூலம் ஒரு திருநங்கையுடன் பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கின்றார்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சின்ன சேலம் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன் என்ற இளைஞர். இவர் மும்பையில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு செட் அமைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவருக்கு கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தை சேர்ந்த சேகர்-அமுதா என்ற தம்பதிக்குப் பிறந்த திருநங்கையான அமிர்தா என்பவருடன் அவருக்கு முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் நட்பாகி இருவரும் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளனர்.
இந்த நெருங்கிய நட்பானது பின்னர் காதலாக மாறியுள்ளது. இருவரும் தங்களது காதலை அவரவர் வீட்டினரிடம் கூறியுள்ளனர். பின்னர் இரு குடும்பத்து பெற்றோரின் சம்மதத்துடன் திருவந்திபுரம் தேவநாத சுவாமியின் திருகோவிலில் விமரிசையாக இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
English Summary
villupuram transgender marraige