8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர்.. அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேப்பலோடை கழுகாசலபுரத்தினை சேர்ந்தவர் மணி. இவருக்கு தற்போது 52 வயதாகிறது. இந்த நிலையில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை அழைத்துச் சென்று தனது வீட்டில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார்.

அப்போது சிறுமி அந்த முதியவரை தள்ளிவிட்டு அங்கிருந்து கூச்சலிட்டு வெளியே தப்பித்து ஓடியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர்கள் சிறுமியிடம் நடந்தவற்றை கேட்டறிந்துள்ளனர்.


இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் முதியவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள மணி கடந்த 1997ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 14 ஆண்டுகள் தண்டனை பெற்று கடந்த 2011ம் ஆண்டு வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vilathikulam 52 years old man sexual Harrasment in 8year child


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->