#ராணிப்பேட்டை || 7 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்.. வேலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் ஹாஜிப்பேட்டை பகுதியை சேர்ந்த சையத் காசீம் என்பவர் கடந்த 2018ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி சென்று மலைப்பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து போலீசார் போச்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து சையத் காசீமை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு வேலூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட சையத் காசீமிற்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைபொன்னி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore pocso court verdict 23years Jail to youth


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->